எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை முருகதாசன் திடலில்பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு

எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை பிற்பகல் 14 மணிக்கு யெநீவா ஐக்கியநாடுகள் சபைக்கு முன் முருகதாசன் திடலில் சிவந்தனின் புரட்சிப்பயண நிறைவை முன்னிட்டு ஐரோப்பிய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து சுவிஸ் ஈழத்தமிழரவை நடாத்தும் பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு. முள்ளிவாய்காயுக்கு பின்னான தமிழர்களின் அடுத்தகட்டு வீச்சையும் நிலைப்பாட்டையும் உலகிற்கு எடுத்துக்கூறவுள்ள இவ் வரலாற்று மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அணைவரையும் உரிமையுடன் அழைக்கும்

ஐரோப்பியத் தமிழ் அமைப்புக்கள்

சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணத்திற்கு தெம்பூட்ட மக்களை அழைக்கும் உதவியாளர்கள்

இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதி கேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் 42 மைல்களை எட்டியுள்ளது.பிரித்தானியாவின் கடற்கரையான டோவரைச் சென்றடைய இன்னும் 35 மைல்கள் அவர் நடக்க வேண்டியிருப்பதாக, அவரது உதவியாளர்கள் அறியத் தந்துள்ளனர். சிவந்தன் அவர்கள் மாலை 6 மணியளவில் டோவரை அண்மிப்பார் என உதவியாளர்கள் தெரிவித்துள்ள போதிலும், அவரின் கால்களின் தசைகள் இறுகிய நிலை காணப்படுவதாகவும், சிவந்தனுக்கு தைரியம் கொடுப்பதற்காக தமிழின உணர்வாளர்களை வீதிக்கு வந்து அவருக்கு தெம்பூட்டுமாறு அழைக்கின்றனர்.சிவந்தனை உற்சாகப்படுத்தவும், தமிழ் மக்கள் கோரிக்கைகளை வலுவாக முன்வைக்கவும் அவருடன் இணைந்து அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்கள் நடக்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் இருந்து ஐ, நா முன்றல் வரை ஈழத்தழிழனின் நடைப்பயணம்(தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு)

In early part of 2009 genocide of Tamils in Sri Lanka reached