எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை முருகதாசன் திடலில்பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு

எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை பிற்பகல் 14 மணிக்கு யெநீவா ஐக்கியநாடுகள் சபைக்கு முன் முருகதாசன் திடலில் சிவந்தனின் புரட்சிப்பயண நிறைவை முன்னிட்டு ஐரோப்பிய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து சுவிஸ் ஈழத்தமிழரவை நடாத்தும் பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு. முள்ளிவாய்காயுக்கு பின்னான தமிழர்களின் அடுத்தகட்டு வீச்சையும் நிலைப்பாட்டையும் உலகிற்கு எடுத்துக்கூறவுள்ள இவ் வரலாற்று மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அணைவரையும் உரிமையுடன் அழைக்கும்

ஐரோப்பியத் தமிழ் அமைப்புக்கள்

தமிழ் மக்களுக்கெதிரான இனப்படுகொலையை கண்டித்து இலண்டனில் இருந்து எதிர்வரும் ஜூலை 23ம் திகதி ஜெனிவா நோக்கிய எழுச்சி நடைப்பயணம்.
இவ் எழுச்சி நடைப்பயணத்தின் முடிவில் இன் நான்கு அம்சக் கோரிக்கைகளுடன் கூடிய மகஜரும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.

1) இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக நடாத்தப்படும் இனச்சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலையை சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட்டு நிரூபிக்கப்படவேண்டும்.

2) போர்க்குற்ற விசாரணைகளுக்காக ஐகிய நாடுகள் சபை நியமித்த நிபுணர் குழு உடனடியாக சுயாதீனமாக செயற்பட்டு போர்க்குற்றவாளிகள் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தண்டிக்கப்படவேண்டும் (இது தொடரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வழிவகுக்கும்!).

3) முட்கம்பி வெளிகளுக்குப் பின்னால் இன்னும் அடைத்துவைக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திரமாக அவர்களது சொந்த இடங்களில் வாழவும், எனைய தமிழ் மக்களும், இராணுவக் கட்டுப்பாடுகளற்ற ஒரு சுதந்திரக்குடிமகனாக வாழ உறுதிசெய்யவேண்டும்.

4) கைதுசெய்யப்பட்டோர், சரணடைந்தோர் மற்றும் காணாமல் போனவர்களுடைய பெயர்ப்பட்டியல் உடனடியாக வெளியிடப்பட்டு அவரகள் கண்டுபிடித்து தரப்படவேண்டும்.

என ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஏக்கங்களை கோரிக்கைகளாக்கி சுமந்து ஜெனிவா நோக்கிய எழுச்சி நடைப்பயணத்தை தொடரும் சிவந்தன் என்ற ஈழ உணர்வாளனுக்கு உங்களது பேராதரவை வழங்கி ஊக்கு விக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து ஐ, நா முன்றல் வரை ஈழத்தழிழனின் நடைப்பயணம்(தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு)

In early part of 2009 genocide of Tamils in Sri Lanka reached